ஆவணங்களை சட்டபூர்வமாக்குதல், உறுதிப்படுத்துதல் மற்றும் சான்றுப்படுத்துதல்
- பொதுமக்களுக்காக திறந்திருக்கும் நேரம் - திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
- அனைத்து மூல ஆவணங்களும் போட்டோ பிரதிகளுடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்
- இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்களை சட்டபூர்வமாக்குதல், சான்றுப்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்துதல்
ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்காகவும் சட்டபூர்வமாதாக்குவதற்காகவும் இலங்கை, வெளிநாட்டு அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட மூல ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்படி விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (போட்டோ பிரதிகள்/ வருடுபொறிப்படுத்தப்பட்ட அல்லது திருத்தப்பட்ட ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது)
வெளிநாட்டு அமைச்சினால் உறுதிப்படுத்தபடுத்தப்படாத ஆவணங்கள் இதற்காக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை தயவுசெய்து கவனத்திற் கொள்ளவும்.
எதியோப்பியா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்ககளை சான்றுப்படுத்துதல்
எதியோப்பியா அதிகாரிகளால் எதியோப்பியாவில் வழங்கப்பட்ட எதியோப்பியா வெளிநாட்டு அமைச்சின் சட்டபூர்வமாக்கும் பிரிவினால் சரிபார்க்கப்பட/ உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் இலங்கை தூதரகத்திற்கு சான்றுப்படுத்துவதற்கு அல்லது சட்டபூர்வமாக்குவதற்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
எதியோப்பியா கல்வி/ பட்டப்படிப்பு சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவகத்தினால்/ பல்கலைக்கழகத்தினால் சான்றுப்படுத்தப்பட்டு சட்டபூர்வமானதாக்கப்படாவிட்டால் அவை இந்த தூதரகத்;தினால் சட்டபூர்வமாக்கப்பட மாட்டாது என்பதை தயவுசெய்து கவனத்திற் கொள்ளவும்.
கட்டணங்கள்
ஆவணங்ககளை அத்தாட்சிப்படுத்துதல் (சட்டபூர்வமாக்குதல்) உறுதிப்படுத்துதல் மற்றும் சான்றுப்படுத்துதல் | US$ |
தடை எச்சரிக்கை கட்டளை | 20 |
சமாதான நீதவான் என்ற வகையில் ஆவணங்களை அத்தாட்சிப்படுத்துதல் | 50 |
சத்தியகடதாசியை உறுதிப்படுத்துதல் அல்லது சத்தியம் செய்தல் | 50 |
சத்தியத்தை எடுத்தோதல் அல்லது உறுதிப்படுத்தல் | 50 |
அற்றோனி தத்துவத்தை அல்லது பதிலாள் பத்திரத்தை அத்தாட்சிப்படுத்துதல் | 50 |
சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப் பிரதியை வழங்குதல் | 05 |
ஆவணமொன்றை அத்தாட்சிப்படுத்துதல் (ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்கள் என்பவற்றைத் தவிர்த்து) | |
ஆவணத்தின் உரிமையாளர் இலங்கைப் பிரசையாக இருந்தால் | 30 |
ஆவணத்தின் உரிமையாளர் வெளிநாட்டு பிரசையாக இருந்தால் | 33 |
கல்வி சான்றிதழ்களை அத்தாட்சிப்படுத்துதல் | 05 |
ஒரு தொகுதி ஏற்றுமதி ஆவணங்களை அத்தாட்சிப்படுத்துதல் | 44 |
ஏனைய தகவல்கள்
கட்டணங்கள் | : | விண்ணப்பதாரர் விண்ணப்பத்தை; நேரடியாக சமர்ப்பித்தால் கொடுப்பனவை கருமபீடத்தில காசாக செலுத்த வேண்டும். |
வங்கி விபரங்கள் | : | இலங்கை தூதரகம், எதியோப்பியா வர்த்தக வங்கி, Foreign Transfers & NR NT Accounts Branch, Birr A/C No: 1000 18365 9271 or USD A/C No: 1000 18365 9174 (SWIFT: CBETETAA) |
தனிப்பட்ட காசோலைகள், டெபிற்/ கிறடிட் அட்டைகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அனைத்து மூல சான்றிதழ்களும் பார்வையிட்டதன் பின்னர் திருப்பி அளிக்கப்படும்.
கவனிக்கவும்: தபாலில் காணாமற்போகும் ஆவணங்களுக்கு தூதரகம் பொறுப்பேற்காது.
சான்றிதழை/ ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கு விண்ணப்பதாரருக்கு நேரடியாக தூதரகத்திற்கு வர முடியாவிட்டால் அவற்றை பெறுவதற்கு வேறொரு நபருக்கு எழுத்துமூலம் விண்ணப்பதாரர் அனுமதியளிக்க வேண்டும். ஆவணங்களைப் பெறுவதற்கு வரும் நபர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்துவதோடு தூதரகத்தினால் வழங்கப்பட்ட மூல பற்றுச்சீட்டைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அற்றோனி தத்துவம் மற்றும் சத்தியகடதாசி - இலங்கை பிரசைகள் மற்றும் இரடடை பிரசாவுரிமை உள்ளவர்கள்
செல்லுபடியான கடவுச்சீட்டும் எதியோப்பியாவுக்கான செல்லுபடியான விசாவும் வைத்திருக்கும் எந்த இலங்கை பிரசையும் இலங்கை தூதரகத்தில் கொன்சுலர் அதிகாரி முன்னிலையில் அற்றோனி தத்துவமொன்றில் அல்லது சத்தியகடதாசியொன்றில் கையொப்பமிட முடியும்.
ஏனைய தேவைகள்
கவனிக்கவும்: அற்றோனி தத்துவம் மற்றும் சத்தியகடதாசி என்பவற்றை கையொப்பமிடாமல் சமர்ப்பித்து விண்ணப்பதாரி தூதரகத்தில் கொன்சுலர் அதிகாரி முன்னிலையில் கையொப்பமிட வேண்டும்.
இந்த தூதரகத்தில் அத்தாட்சிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்படும் அற்றோனி தத்துவம் அல்லது சத்தியகடதாசி எதியோப்பியாவில் சட்ட ஆலோசகர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டிருந்தால் அந்த ஆவணம் எதியோப்பியா சட்டபூர்வமாக்கப்படும் பிரிவில் சட்டபூர்வமாக்கப்பட்டிருக்க வேண்டும்.
அற்றோனி தத்துவம்
உங்களுடைய அற்றோனி தத்துவத்தில் இரண்டு சாட்சிகள் கையொப்பமிட வேண்டும் எனக் கேட்கப்பட்டால் நீங்கள் இரண்டு சாட்சிகளை அழைத்து வர வேண்டும். சாட்சிகள் இலங்கைப் பிரசைகளாக இருக்க வேண்டும். அவர்கள் செல்லுபடியான கடவுச்சீட்டையும் செல்லுபடியான எதியோப்பியா விசாவையும் கொண்டிருக்க வேண்டும்.
முக்கியம்: பிரசாவுரிமை நிலை சம்பந்தமாக தவறான பிரகடனத்துடன் சேர்த்து போலி அல்லது வருடுபொறிக்குட்படுத்தப்பட்ட பிரித்தானிய சான்றிதழ்களை அல்லது ஏனைய போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தல் குற்றமாகும். அத்தகைய விடயங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும். செலுத்தப்பட்ட கட்டணங்கள் மீளளிக்கப்பட மாட்டாது.