இலங்கையிலிருந்து பொலிஸ் இசைவுச் சான்றிதழுக்கான விண்ணப்பம்
- பொதுமக்களுக்காக திறந்திருக்கும் நேரம் - திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
- முற்கூட்டியே நேரம் ஒதுக்கிக்கொள்ள தேவையில்லை – முதலில் வருபவருக்கு முதலில் சேவை என்ற அடிப்படையில்
- அனைத்து மூல ஆவணங்களும் போட்டோ பிரதிகளுடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்
கட்டணங்கள் | : | தூதரகத்தில் காசாக செலுத்துதல் அல்லது வங்கி வைப்பு |
வங்கி விபரங்கள் | : | இலங்கை தூதரகம், எதியோப்பியா வர்த்தக வங்கி, Foreign Transfers & NR NT Accounts Branch, Birr A/C No: 1000 18365 9271 or USD A/C No: 1000 18365 9174 (SWIFT: CBETETAA) |
பின்வருமாறு விண்ணப்பிக்க முடியும்;
- இணையவழியில் https://www.police.lk/index.php/item/58
- இந்தத் தூதரகத்தின் கொன்சுலர் பிரிவுக்கு மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
- பொலிஸ் இசைவுச் சான்றிதழுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்க (தயவுசெய்து www.police.lk) இணையத்தளத்திற்கு விஜயம் செய்யவும்
எதியோப்பியா, ஜிபூடி, சோமாலியா, தென் சூடான் ஆகிய இடங்களில் உள்ள இலங்கையர்கள் நேரடியாக தமது விண்ணப்பங்களை பொலிஸ் திணைக்களத்திற்கு அவர்களுடைய இணையவழி முறைமை ஊடாக விண்ணப்பிக்க முடியும். அல்லது இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு முன்வைப்பதற்கு தூதரகத்திற்குச் சமர்ப்பிக்க முடியும்.
இலங்கையரல்லாதவர்கள், தயவுசெய்து அவர்களுடைய கடவுச்சீட்டின் பிரதியை சமர்ப்பிக்க வேண்டும். தேவையான ஆவணங்கள் இல்லாவிட்டால் உங்கள் விண்ணப்பம் பொலிஸ் திணைக்களத்தினால் நிராகரிக்கப்படும்
விண்ணப்பத்தைச் சமர்ப்பித்ததன் பின்னர், அது இலங்கை, கொழும்பு 01, பொலிஸ் தலைமையகத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் (நிர்வாகம்) அவர்களுக்கு முன்வைக்கப்படும். அவர் விண்ணப்பதாரரின் விபரங்களை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களில் சரிபார்த்ததன் பின்னர் இசைவுச் சான்றிதழை வழங்குவார்.
பொலிஸ் இசைவுச் சான்றிதழ் கிடைத்தவுடன், தூதரகத்தின் கொன்சுலர் பிரிவிலிருந்து அதைப் பெற்றுக்கொள்ள முடியும்.