இலங்கைக்கு வெளியே இறப்பை பதிவுசெய்தல்
- விண்ணப்பப் படிவங்களைப் (பதிவு படிவம் - (B 11) பெற்றுக்கொள்ள முடியும்;
- தூதரகத்தின் கொன்சுலர் பிரிவிலிருந்து மு.ப. 10.00 மணிக்கும் பி.ப. 3.00 மணிக்கும் இடையில் பெற்றுக்கொள்ள முடியும்.
- இலங்கைக்கு வெளியில் (எதியோப்பிய / ஜிபூடி / சோமாலியா / தென் சூடான்) மரணமடைந்த இலங்கை பிரசைகளின் இறப்பை பதிவுசெய்வதற்கு பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
- ஒழுங்காகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (பதிவு படிவம் - (B 11)
- இலங்கை அதிகாரிகளால் வழங்கப்பட்ட இறந்தவரின் கடவுச்சீட்டு எதியோப்பிய / ஜிபூடி / சோமாலியா/ தென் சூடான் செல்லுபடியான விசாவுடன். (இறந்தவரிடம் மரணமடைந்த சந்தர்ப்பத்தில் இருக்க வேண்டும்.)
- இறப்பு நிகழ்ந்த நாட்டில் (எதியோப்பிய / ஜிபூடி / சோமாலியா / தென் சூடான்) அதிகாரிகளால் வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ் மற்றும் அதன் பிரதி
- பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி
- இறந்தவரின் விவாக சான்றிதழின் மூலப்பிரதி (விவாகம் செய்திருந்தால்)
- இந்த தூதரகம் இலங்கைப் பிரசைகளுக்கு/ இரட்டைப் பிரசாவுரிமை உள்ளவர்களுக்கு (இலங்கை மற்றும் ஏனைய நாடு) மாத்திரம் இறப்புச் சான்றிதழ்களை வழங்கும்.
- கட்டணம் - US$ 13
ஏனைய தகவல்கள்
கட்டணங்கள் | : | தூதரகத்தில் காசாக செலுத்துதல் அல்லது வங்கி வைப்பு |
வங்கி விபரங்கள் | : | இலங்கை தூதரகம், எதியோப்பியா வர்த்தக வங்கி, Foreign Transfers & NR NT Accounts Branch, Birr A/C No: 1000 18365 9271 or USD A/C No: 1000 18365 9174 (SWIFT - CBETETAA). |
தனிப்பட்ட காசோலைகளும் கிறடிட் அட்டைகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அனைத்து மூல சான்றிதழ்களும் பார்வையிட்டதன் பின்னர் திருப்பி அளிக்கப்படும்.
குறிப்புகள்:
- தபாலில் காணாமற் போகும் ஆவணங்களுக்கு தூதரகம் பொறுப்பேற்காது. சான்றிதழை/ ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கு விண்ணப்பதாரருக்கு நேரடியாக தூதரகத்திற்கு வர முடியாவிட்டால் அவற்றை பெறுவதற்கு வேறொரு நபருக்கு எழுத்துமூலம் விண்ணப்பதாரர் அனுமதியளிக்க வேண்டும். ஆவணங்களைப் பெறுவதற்கு வரும் நபர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்துவதோடு தூதரகத்தினால் வழங்கப்பட்ட மூல பற்றுச்சீட்டைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- பூரணமற்ற விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பப்படும். கட்டணம் மீளச் செலுத்தப்பட மாட்டாது.
- பிரசாவுரிமை நிலை சம்பந்தமாக தவறான பிரகடனத்துடன் சேர்த்து போலி சான்றிதழ்களை அல்லது ஏனைய போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தல் குற்றமாகும். அத்தகைய விடயங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும்.